உள்ளூர் செய்திகள்

பண்டாரவாடை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரணி நடைபெற்றது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-01 10:05 GMT   |   Update On 2023-06-01 10:05 GMT
  • மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பேரணி நடைபெற்றது.
  • உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் பண்டார வாடை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை வகித்து புற நோயாளிகளுக்கு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

பண்டாரவாடை ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் பேரணியும் நடைபெற்றது.

இம்முகாமில் மருத்துவ அலுவலர் அழகு சிலம்பரசி பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் மரியம் பீவி ஊராட்சி செயலாளர் பார்த்திபன் வட்டார சுகாதார ஆய்வாளர் செல்லப்பா சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து சுவாமிநாதன் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் தவ்பிக் அகமது, சாரதி கண்ணன் , அஸ்வின் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News