உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி சாவு
- தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது தொழிலாளி விபத்தில் சிக்கினார்.
- விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது40). கூலி தொழிலாளி. இவர் நேற்று தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கன்னியாகுமரியை நோக்கி சென்ற கார் மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.