உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் அருகே பெண் ஊழியர் மாயம்

Published On 2022-06-11 09:51 GMT   |   Update On 2022-06-11 09:51 GMT
  • கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வநாயகியை தேடி வருகின்றனர்.

நெல்லை:

மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி(வயது 37). இவரது மனைவி செல்வநாயகி(31). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

துரைப்பாண்டி மார்க்கெட்டிங் வேலை பார்த்து வருகிறார். செல்வநாயகி சுகாதாரத்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற செல்வநாயகி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக துரைப்பாண்டி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வநாயகி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News