உள்ளூர் செய்திகள்

முன்னீர்பள்ளம் அருகே மாவு அரைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2022-07-01 09:28 GMT   |   Update On 2022-07-01 09:28 GMT
  • நேற்று வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
  • முன்னீபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வேலம்மாள் (வயது 39).

இவர் நேற்று வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே வேலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக முன்னீபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News