உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2022-09-18 06:26 GMT   |   Update On 2022-09-18 06:26 GMT
  • ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55)
  • மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55). இவர் சம்பவத்தன்று குருவன்கோட்டை-ஆலங்குளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆலங்குளத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News