உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
- சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பொன்மணி கண்டித்துள்ளார்.
- மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் சோனியா நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது44). சமையல் மாஸ்டர். இவர் பொன்மணி (33) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சிவசங்கர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொன்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.