உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

மீண்டும் 70 அடியை நெருங்கும் நீர்மட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2022-08-20 05:52 GMT   |   Update On 2022-08-20 05:52 GMT
  • திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது
  • 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் தென்மேற்குபருவமழை காரணமாக கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை சற்று ஓய்ந்து தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 1678 கனஅடி, நேற்று வரை 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்க ப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கனஅடியாக உள்ளது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. வரத்து 1126 கனஅடி, திறப்பு 1866 கனஅடி, இருப்பு 6194 மி.கனஅடி.

மஞ்சளாறுஅணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 125.62 அடியாகஉள்ளது.

Tags:    

Similar News