search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு குறைப்பு"

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணை கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் மேலூர், கள்ளந்திரி பாசனத்துக்கும், அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 3169 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 2352 கன அடி நீர் வருகிறது. அணையில் நீர் மட்டம் 65.16 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.35 அடியாக உள்ளது. 1451 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தேக்கடி 2.2, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, ஆண்டிபட்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த மழையின் காரணமாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1450 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1224 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு நீர்வரத்து 221 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.
    • இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது.

    கூடலூர்:

    தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ளது. 803 க.அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. 1139 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 55 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 34 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.2, தேக்கடி 1, போடி 1.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.6, ஆண்டிபட்டி 8 மி.மீ. மழையளவு பதிவானது.

    • தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியே ற்றப்பட்டது. இதன்கார ணமாக வைகை அணையின் நீர்மட்டமும் 60 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உள்ளது. வரத்து 1869 கன அடி. நேற்றுவரை 1322 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3371 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது. வரத்து 1355 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3692 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 65 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 413.15 மி.கன அடி. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 99 மி.கன அடி.

    பெரியாறு 21.4, தேக்கடி 22.4, கூடலூர் 21, உத்த மபாளையம் 20, சண்முகாநதி அணை 18.4, போடி 5.4, வீரபாண்டி 13.6, சோத்துப்பாறை 1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விட்ட நிலையில் இன்று 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது.
    • தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடியாக நீர் வரத்து குறைந்து விட்டது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக இதுவரை 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மழை ப்பொழிவு இல்லாத தால் மற்ற அணைகளின் நீர்மட்ட மும் குறைந்து வரு கிறது. இன்று காலை நிலவர ப்படி குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் 37.36 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25 அடியாக உள்ளது.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
    • இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்டவிவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் கேரள அரசு நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதை ஐவர் மற்றும் மூவர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1467 கன அடியில் இருந்து 1400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 52.62 அடியாக உள்ளது. அணைக்கு 1154 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 50.95 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.37 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.

    இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 1800 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.

    தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலி ருந்து 2,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது.
    • அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நேற்றைய விட இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பவானி ஆற்றுக்கு 250 கன அடி என மொத்தம் 1250 கன அடி விதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது
    • அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது

    ஈரோடு,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடு வெனஉயர்ந்து வந்தது.

    இதையடுத்து அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுஇருந்தது.

    இதே போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது கால்வாயில் 500 கனஅடியும், பவானி ஆற்றில் 500 கனஅடியும் என மொத்தம் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.

    • அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணி த்துறையின ரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் 142 அடி வரை தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.

    ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவ ட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் நேற்று அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.

    நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரி யாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம்.

    எனவே நேற்று 1106 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து 67.03 அடியாக உள்ளது. நீர்வரத்து 2158 கனஅடி. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5904 மி.கன அடியாக உள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணி த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிட ப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. வரத்து 50 கன அடி. திறப்பு 30 கன அடி.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 64.55 அடியாக உள்ளது.

    இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று குறைக்க ப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 842 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. 884 கன அடி நீர் வருகிறது. 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 433.28 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணை 4.6, தேக்கடி 2.4, சண்முகாநதி அணை 2.2, உத்தமபாளையம் 1.2, போடி 3.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×