search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reduction of water release"

    • தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியே ற்றப்பட்டது. இதன்கார ணமாக வைகை அணையின் நீர்மட்டமும் 60 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உள்ளது. வரத்து 1869 கன அடி. நேற்றுவரை 1322 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3371 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது. வரத்து 1355 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3692 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 65 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 413.15 மி.கன அடி. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 99 மி.கன அடி.

    பெரியாறு 21.4, தேக்கடி 22.4, கூடலூர் 21, உத்த மபாளையம் 20, சண்முகாநதி அணை 18.4, போடி 5.4, வீரபாண்டி 13.6, சோத்துப்பாறை 1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணி த்துறையின ரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் 142 அடி வரை தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.

    ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவ ட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் நேற்று அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.

    நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரி யாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம்.

    எனவே நேற்று 1106 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து 67.03 அடியாக உள்ளது. நீர்வரத்து 2158 கனஅடி. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5904 மி.கன அடியாக உள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணி த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிட ப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. வரத்து 50 கன அடி. திறப்பு 30 கன அடி.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 64.55 அடியாக உள்ளது.

    இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று குறைக்க ப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 842 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. 884 கன அடி நீர் வருகிறது. 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 433.28 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணை 4.6, தேக்கடி 2.4, சண்முகாநதி அணை 2.2, உத்தமபாளையம் 1.2, போடி 3.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த ஆண்டு மழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் முழுகொள்ளளவிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி நேற்று 7574 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரின் தேவை குறைவாகவே உள்ளது. எனவே வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது. அணைக்கு 3888 கனஅடிநீர் வருகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 2416 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, அணைக்கு 500 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதிஉபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 126.60 அடியில் நீடிக்கிறது. 243 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதி உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.2, தேக்கடி 8.6, மஞ்சளாறு 25, சோத்துப்பாறை 11 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×