தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது.அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விட்ட நிலையில் இன்று 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com