உள்ளூர் செய்திகள்

வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி விலை உயர்வு

Published On 2022-09-24 10:00 GMT   |   Update On 2022-09-24 10:00 GMT
  • தினமும் இந்த பகுதிகளிலிருந்து 25 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
  • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று 5 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஓசூர், திருப்பூர், தேனி போன்ற பகுதிகளில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகின்றன. தினமும் இந்த பகுதிகளி லிருந்து 25 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில் ஓசூர், தேனி போன்ற மாவட்டங் களில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக கொத்தமல்லி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று 5 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

இதனால் ஒரு கட்டு பத்து ரூபாய்க்கு விற்க ப்பட்ட நிலையில் இன்று ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை யானது. இதேபோல் புதினா கட்டு 6 ரூபாய்க்கும், கருவேப்பிலை ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்கப்பட்டது. 

Tags:    

Similar News