உள்ளூர் செய்திகள்

சிவகாசி: மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

Published On 2023-11-25 09:39 GMT   |   Update On 2023-11-25 09:39 GMT
  • சிவகாசி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மர அரவை மில்லில் வேலை பார்த்து வருகி றார்.

இவரது மனைவி அச்சகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் ஜெயராஜன் (வயது 19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் தனது நண்பர்கள் மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் ஆகியோ ருடன் அழகாபுரியில் உள்ள ஒடையில் குளிக்க சென்றனர். பின்னர் மாலை யில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

மோட்டார் சைக்கிளை ஜெயராஜன் ஓட்டி வந்தார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர்.

சுக்கிரவார்பட்டி பேப்பர் மில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயராஜன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெய்சங்கர் திருத்தங்கல் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News