உள்ளூர் செய்திகள்
வள்ளலார் முப்பெரும் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
- வள்ளலாரின் புகழை பரப்பிவருபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
- மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என போதித்த வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் 200வது ஆண்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வள்ளலாரின் புகழை பரப்பிவருபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தார். வள்ளலார் பேரவை சார்பில் பத்மனேந்திர சுவாமிகள் சால்வை அணிவித்து வரவேற்றார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.