உள்ளூர் செய்திகள்
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நியமனம்- விஜய் வசந்த் வாழ்த்து
- டி.என்.பிரதாபனின் ராஜினாமாவை கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டார்.
- ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விஜய் வசந்த் பாராட்டி அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக இருந்த டி.என்.பிரதாபன் எம்.பி. ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டார். அத்துடன், மீனவர் காங்கிரஸ் புதிய தலைவராக ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராட்டி அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.