உள்ளூர் செய்திகள்

பட்டா ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-25 09:37 GMT   |   Update On 2022-06-25 09:37 GMT
  • பட்டா ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்

திருச்சி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அபிஷேகபுரம் கிளைகள் சார்பில் பஞ்சப்பூர் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சப்பூர் பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் குடியிருப்பு பட்டாவிற்காக போட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.

வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் மின் மயானம் அமைப்பதை கைவிட வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலையை தார்ச் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் குருநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ராமச்சந்திரன், பகுதி செயலாளர் வேலுசாமி ஆகியோர் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News