- திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் கூட்ட மன்றத்தில் புதிய ஒன்றிய குழு தலைவர் சே.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது
- கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பேசப்பட்டது.
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் கூட்ட மன்றத்தில் புதிய ஒன்றிய குழு தலைவர் சே.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது
துணைத் தலைவர் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி, மருததுரை மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் பேசியதாவது
கடந்த காலத்தில் பொது மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு கால தேக்கமடைந்த திட்டப்பணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு சிறந்த ஊராட்சி ஒன்றியமாக அமைய இந்த ஒன்றிய குழு சிறப்பாக பணியாற்றும் எனக் கூறினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி சித்ரா தமிழ்ச்செல்வன் சரவணன் பாலசுப்பிரமணியன் செல்வராணி முருகன் தீபா வசந்தபாரதி மாரியாயி கோவிந்தராசு அமராவதி சுப்பிரமணி பிருந்தா முத்துலட்சுமி மல்லிகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அனைத்து பணியாளர்களும் பங்கேற்றனர்.