உள்ளூர் செய்திகள்
- ஓய்வு பெற்ற அதிகாரி மாயமானார்
- வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் அழிக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 36) இவரது தந்தை தேவசகாயம் (67) பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன் தினம் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அமல்ராஜ் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.