உள்ளூர் செய்திகள்

படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம்

Published On 2022-09-27 09:04 GMT   |   Update On 2022-09-27 09:04 GMT
  • படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம் ஏற்பட்டது
  • பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் விரைவு பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் நள்ளிரவு படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் தென்காசியில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் அரசு விரைவு பேருந்து பஸ் நிலையம் வந்தது. அந்த பஸ்ஸினை தென்காசி புளியங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த முகமது மொய்தீன் பிச்சை (41) ஓட்டி வந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் மீண்டும் பஸ்ஸை பின்னோக்கி இயக்கிய போது எதிர்பாராத விதமாக அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் மீது மோதியதாக கூறப்பட்டது.

இதில் அவரது இடது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து அந்த பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News