உள்ளூர் செய்திகள்

திருச்சி கே.கே.நகரில் நாளை மின்தடை

Published On 2022-08-04 09:25 GMT   |   Update On 2022-08-04 09:25 GMT
  • திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை 5-ந் தேதிமின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
  • திருச்சி ஏர்போர்ட், ஜே.கே.நகர், கோளரங்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்து ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான போலீஸ் காலனி,

ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ராமசந்திராநகர், கே.கே.நகர், நெடுஞ்செழியன்நகர், போஸ்ட் ஆபிஸ்ரோடு, காமராஜர் தெரு, இ.வி.ஆர்.சாலை, கக்கன் காலனி, கோவர்தன்கார்டன், ராஜகணபதி நகர், டிஆர்பி நகர், காந்தி நகர், காமராஜ்நகர், திருச்சி ஏர்போர்ட், ஜே.கே.நகர், கோளரங்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News