உள்ளூர் செய்திகள்

டாக்டர்களுக்கான மருத்துவ கல்வி மேம்படுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-06-28 08:11 GMT   |   Update On 2022-06-28 08:11 GMT
  • டாக்டர்களுக்கான மருத்துவ கல்வி மேம்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • 60 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்

திருச்சி:

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மருத்துவ சேவையாற்றி வரும் ஹர்ஷமித்ரா உயர் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் அனைத்திந்திய மருத்துவ சங்கம், திண்டுக்கல் கிளை சார்பில் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி மேம்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் டாக்டர்கள குழுவினர் 60 பேர் கலந்து கொண்டனர்

ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் இயக்குநர்கள் டாக்டர்.ஜி.கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் பொது நடைமுறையில் புற்றுநோயால் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவுரை வழங்கினர்.

அனைத்திந்திய திண்டுக்கல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர். கே.மஹாலட்சுமி செயலாளர்டாக்டர் டி.ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, டாக்டர்.எஸ்.டீன் வெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர். ஜி.கோவிந்தராஜ் பேசுகையில், புற்றுநோயாளிகளின் சிகிச்சையில் பல்வேறு சிறப்புகளின் பங்கு குறித்து பேச்சாளர்கள் விளக்கினர். மேலும் இத்தகைய திட்டங்கள் புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு நிபுணர்களை புதுப்பிப்பதற்கு உதவுகின்றன, இதனால் புற்றுநோயாளிகளின் விரிவான பலதரப்பட்ட கவனிப்பை மேம்படுத்துகிறது என்றார் .

Tags:    

Similar News