உள்ளூர் செய்திகள்

கைதிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடை பயணம்

Published On 2022-07-19 09:25 GMT   |   Update On 2022-07-19 09:25 GMT
  • கைதிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் நடைபெற்றது.
  • சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்ய வேண்டும்

திருச்சி:

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் 15 நாட்கள் பெருந்திரள் நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் ந மாவட்ட துணைச் செயலாளர் காஜா, மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா,மாவட்ட இளைஞரணி சேக், ஆழ்வார்தோப்பு துணைச் செயலாளர் முபாரக்,சமயபுரம் பகுதி செயலாளர் பாருக் மற்றும் பாண்டியன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News