ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
- ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
- 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி ரெயில்வே ஜங்சனுக்கு கடந்த 23ந் தேதி முன்னறிவிப்பு பிரிவு காவலருக்கு குறுந்தகவல் மூலம் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் பிரவீன் அடைக்கலராஜ் என்பவருக்கு வந்த குறுந்தகவலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பதிவிடப்பட்டு ஒரு ஆபாசமான வீடியோ பதிவு அவருக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் பிரவீன் அடைக்கலராஜ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், புதுக்கோட்டை திருமயம் குழி பிறை திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.