உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

Published On 2023-02-01 09:48 GMT   |   Update On 2023-02-01 09:48 GMT
  • 194 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • வீட்டில் வைத்து விற்பனை

திருச்சி, 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன்(வயது 55).இவர் தனது வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் வீட்டிலிருந்து 194 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News