- அமலா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
திருச்சி:
முசிறி அமலாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அமலா குழுமம் தலைவர் மேரி ஜாய்ஸ் பேபி, புனித வளனார் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோதி ஹில்டா மேரி, தலைமையாசிரியை செபஷ்டினா செல்வி ஆகியோர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலின் ரோஸி சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பள்ளியை சேர்ந்த மாண,வ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளியில் பயிலும் மாண,வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர். பள்ளியின் ஆங்கில ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.