உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 21-ந்தேதி நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை - மீனலோச்சினி பங்கேற்கிறார்

Published On 2022-08-18 09:49 GMT   |   Update On 2022-08-18 09:49 GMT
  • ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முழு பாகல் மடத்தில் நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • சென்னை அன்னமாச்சார்யார் நுண்கலை கோவில் தாள்ளபாக்க அன்னமய்யாவின் குழுவைச் சேர்ந்த பிரபல பாடகி டாக்டர் தாள்ளபாக்க வேங்கட மீனலோச்சினி மற்றும் குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முழு பாகல் மடத்தில் நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும்போது, வருகிற 21-ந்தேதி நடைபெறும் நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை நிகழ்ச்சியில் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் மற்றும் பாரம்பரிய பக்தி பாடல்கள் இசைக்கப்படுகிறது.

இதில் சென்னை அன்னமாச்சார்யார் நுண்கலை கோவில் தாள்ளபாக்க அன்னமய்யாவின் குழுவைச் சேர்ந்த பிரபல பாடகி டாக்டர் தாள்ளபாக்க வேங்கட மீனலோச்சினி மற்றும் குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சங்கீத ஆராதனை விழாவில் பக்த கோடிகள் அனைவரும் கலந்துகொண்டு ரங்கநாதர் அருளுடன் மனதுக்கு இதமான இசையை கேட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News