உள்ளூர் செய்திகள்
மருந்து கடை உரிமையாளரிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது
- தாதகாப்பட்டி சண்முகநகர் ஜங்ஷன் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
- மார்ட்டின் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அன்னதா னப்பட்டி வள்ளுவர் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). இவர் தாதகாப்பட்டி சண்முகநகர் ஜங்ஷன் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று காலை இவர் சண்முக நகர் பகுதி யில் நடந்து சென்று கொண்டி ருந்த போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தி முனையில் அவரிடம் இருந்த 2½ பவுன் தங்க செயின் மற்றும் 1,700 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து அருண்குமார் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிச்சிப்பாளையம் அருகே உள்ள எருமபாளையம் மெயின் ரோடு,முருக கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.