உள்ளூர் செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும்பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கியது

Published On 2022-09-05 09:25 GMT   |   Update On 2022-09-05 09:25 GMT
  • 1,258 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
  • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட 1,258 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

முகாமில் வாக்காளர்களிடம் படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் சுய விருப்பத்தின் பேரில் இணைத்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில்:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 66 ஆயிரத்து 264 ஆகும். இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 965 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர்.

இது 38 சதவீதம் ஆகும். மீதம் உள்ள வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

Tags:    

Similar News