உள்ளூர் செய்திகள்

நடிகை கஸ்தூரி.

நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்திய மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை - திருப்பூரில் நடிகை கஸ்தூரி பேட்டி

Published On 2023-06-12 04:45 GMT   |   Update On 2023-06-12 04:45 GMT
  • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
  • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

திருப்பூர் :

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News