உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-09-14 06:01 GMT   |   Update On 2022-09-14 06:01 GMT
  • வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
  • வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

வெள்ளகோவில் :

முத்தூர் அருகே உள்ள முத்து மங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் முத்தூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று காலை இவரும் இவரது மனைவியும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த செயின், மோதிரம், தோடு, ஆரம் உட்பட மொத்தம் 11.3/4 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்,. வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News