உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் லாட்டரி நடத்தியவர் கைது

Published On 2022-12-21 06:35 GMT   |   Update On 2022-12-21 06:35 GMT
  • மளிகை கடையில் ஆன்லைன் லாட்டரி நடத்துவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • மளிகை கடை உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் கொசவம்ப்பாளையம் ரோட்டில் உள்ள மளிகை கடையில் ஆன்லைன் லாட்டரி நடத்துவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார்,செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி நடத்திய மளிகை கடை உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News