உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

வெள்ளகோவில் பகுதியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

Published On 2022-06-30 06:18 GMT   |   Update On 2022-06-30 06:19 GMT
  • டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் புழுக்கள் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டை சுற்றி உள்ள பழைய டயர், தேங்காய் மட்டைகளில் நீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியோர், கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமாறு வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News