உள்ளூர் செய்திகள்
உடுமலை பூளவாடியில் பித்தளை பொருட்களை திருடியவர் கைது
- ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பித்தளைப்பொருட்கள் கொள்ளை போனது.
- குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை அருகே குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பூளவாடி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மனைவி பத்மபிரியா. கடந்த 2மாதங்களாக தனது வீட்டில் பராமரிப்புபணி நடப்பதால் வீட்டில் உள்ள பொருட்களை தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரகுபதி அம்மாள் என்பவர் வீட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பித்தளைப்பொருட்கள் கொள்ளை போனது.
இது குறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் முருகன் (55 )என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு போன பொருட்களை மீட்டனர்.