உள்ளூர் செய்திகள்
சிதலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
- குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது.
- வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. பல இடங்களில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் போடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை புதூர் பிரிவு அருகில் குடிநீர் குழாய் பதிப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்களாக சாலை போடப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. விரைவில் அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.