உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி விவசாய தொழிலாளி பலி

Published On 2022-08-07 09:48 GMT   |   Update On 2022-08-07 09:48 GMT
  • நீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கி உள்ளார்.
  • மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் காலனிபகுதியை சேர்ந்த கிட்டான் என்பவரது மகன் ஆறுச்சாமி (வயது 45 ). கூலி தொழிலாளியான இவர் அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் தோட்டத்திற்குச் சென்ற ஆறுச்சாமி நீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது ஆறுச்சாமி மயங்கி கீழே விழுந்து கிடப்பதை கண்டு உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News