உள்ளூர் செய்திகள்
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் தனியார் காம்பவுண்டில் வசிப்பவர் கண்ணதாசன்(வயது 31). பனியன் நிறுவன தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.