உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி

Published On 2022-06-08 09:39 GMT   |   Update On 2022-06-08 09:39 GMT
  • இறந்தவர் அடையாளம் தெரியவில்லை.
  • தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதியது.

ஜோலார்பேட்டை:

குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகே சுமார் 40 வயதுதக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் வெள்ளை மற்றும் கிரே கலரில் அரைக்கை சட்டை, நீல நிற லுங்கி அணிந்து உள்ளார்.

இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News