கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
- செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
பா.ம.க., நிறுவனர் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் கோவில்பட்டியில் கட்சி கொடியேற்று விழா, மரக்கன்று நடும் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அங்கு மரக்கன்றுகளை நட்டினார். பின்னர், செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், இளைஞரணி துணை செயலாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன் கிழக்கு ஒன்றிய செயலாளர் லெனின் குமார் கயத்தார் ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.