உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு

Published On 2022-07-18 08:16 GMT   |   Update On 2022-07-18 08:16 GMT
  • வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.
  • பீரோவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா இனாம் கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 45) . இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வலங்கைமான் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News