உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளர் மாயம்

Published On 2022-06-29 09:13 GMT   |   Update On 2022-06-29 09:13 GMT
  • வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர் காளிமுத்து வீட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.
  • அவரது மனைவி கணபதி சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- கழுகுமலை ரோடு, முனிசிபல் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற காளிமுத்து வீட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.

காளிமுத்து வீட்டுக்கு வராததால் அவரது மனைவி கணபதி உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். அதன்பிறகும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News