உள்ளூர் செய்திகள்
கோயம்பேடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
- மதுபோதையில் வீட்டுக்கு வந்த வாலிபர் மனைவி நாகூரம்மாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
- பின்னர் அறைக்கு சென்ற அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
கோயம்பேடு அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஹபீப்(வயது36). ராமாபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். ஹபீப், கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் தவித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவி நாகூரம்மாவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அறைக்கு சென்ற ஹபீப் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு கடன் கொடுத்தவர்கள் யாரோனும் நெருக்கடி கொடுத்தனரா? என்று கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.