உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2023-10-07 08:40 GMT   |   Update On 2023-10-07 08:40 GMT
  • மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார்.
  • விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போரூர்:

சென்னை விருகம்பாக்கம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது38). பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவர் மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜசேகர் படுக்கையறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News