உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்- டி.டி.வி. தினகரன் பங்கேற்று பேசுகிறார்

Published On 2022-09-15 04:16 GMT   |   Update On 2022-09-15 04:16 GMT
  • பொதுக்கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
  • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

திருப்பூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை முதலே திருப்பூருக்கு திரண்டு வந்தனர். மேலும் டி.டி.வி. தினகரனை வரவேற்று திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News