உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்பேட்டையில் தீயில் கருகிய நிலையில் 3-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி
- வெப்பம் தாங்க முடியாமல் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் பணி புரிந்து வந்தவர் ஜெயந்தி (வயது35). இவர் 3-வது மாடியில் உள்ள சமையல் அறையில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் போது சுடிதாரில் தீப்பிடித்தது.
இதையடுத்து வெப்பம் தாங்க முடியாமல் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.