உள்ளூர் செய்திகள்
வளசரவாக்கத்தில் பிளஸ்-2 மாணவன் மாயம்
- வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார்.
- பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம்.
போரூர்:
வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது17). நெசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கராத்தே பள்ளிக்கு சென்ற ஜெயபிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.