உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-26 05:04 GMT   |   Update On 2022-10-26 05:04 GMT
  • பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாகவே இருந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
  • மனமுடைந்த பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதிராஜா (வயது 28). டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்படுவதற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாகவே இருந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றிய குளத்தூர் போலீசார் பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News