உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-11-01 05:42 GMT   |   Update On 2023-11-01 05:42 GMT
  • மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார்.
  • கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 22).

இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4-வது ஆண்டு பயின்று வந்தார். மேலும் அதே மருத்துவமனையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மகேஸ்வரி நேற்று இரவு 7 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என கூறி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அங்கு வந்த மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News