உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்ததால் கணவர் தற்கொலை

Published On 2023-04-21 06:39 GMT   |   Update On 2023-04-21 06:39 GMT
  • டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.
  • வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்:

வியாசர்பாடி, முல்லைநகர், 82-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (வயது27). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பவித்ரா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனால் வெள்ளை பிரகாஷ் மகிழ்ச்சியுடன் இருந்தார். கடந்த சில நாட்களாக பவித்ராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பரிசோதனைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பவித்ராவின் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் இறந்த குழந்தையை அகற்றினர். இதனால் வெள்ளை பிரகாஷ் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே வீட்டிற்கு வந்த வெள்ளை பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News