தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-05-16 09:53 IST   |   Update On 2024-05-16 09:53:00 IST
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 50.57அடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்மட்டம் 50.16 அடியாக சரிந்தது.
  • இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

சேலம்:

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று 126 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 207 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 50.57அடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்மட்டம் 50.16 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News