உள்ளூர் செய்திகள்
பாலியல் தொல்லையால் மாணவி ஆட்டோவில் இருந்து குதித்தார்- கானா பாடகர்கள் 2 பேர் கைது
- ஆட்டோவில் பயணம் செய்த 2 வாலிபர்கள் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர்.
- அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த 2 வாலிபர்கள் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கானா பாடகர்களான வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகன் என்கிற டோலாக் ஜெகன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் ஜெகன் சினிமாவில் பாடல் பாடி உள்ளார்.