உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணி வழங்க நியமன தேர்வு: அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Published On 2022-06-17 09:36 GMT   |   Update On 2022-06-17 09:36 GMT
  • பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும்.
  • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களின் பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

ஆகவே வருங்கால மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டும், தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும், தமிழக அரசு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News